Time of Purchase : வாங்கும் பொழுது இருக்கிற விலை ... விற்கிற பொழுது இருப்பதில்லை... அது ஏன்?
Time of Purchase : வாங்கும் பொழுது இருக்கிற விலை ... விற்கிற பொழுது இருப்பதில்லை... அது ஏன்?
New Products vs Old Products |
வாங்கும்போது இருக்கிற விலை விற்கும் போது இருப்பதில்லை. ஆமாங்க! எந்த பொருள் ன்னு கேட்கிறீங்களா அதாங்க நம்ம பயன்படுத்தற வீட்டு உபயோகப் பொருட்களை தான்.
நான் சொல்றேன் வீட்டுக்கு தேவையானதை எவ்வளவு விலை கொடுத்தாவது நம்ம வீட்டுக்கு வாங்கி போடறோம். ஆனா வீட்டில் இருக்கிற பொருளை அதாவது நாம பயன்படுத்திய பொருளை அடுத்தவங்களுக்கு செகனன்ட்டா விக்கிற தலைவலி இருக்கிறதே.....!
அந்த கடவுள் தான் பாக்கணும் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு வாங்கினாலும் 5000 ரூபாய்க்கு கொடு என்று கேட்பான் முடியாதுன்னு சொல்லி அதை மறுபடியும் இங்கிருந்து வேற இடத்துக்கு கொண்டு போய் சேர்க்கறதுக்கு அதுக்கு ஒரு பணம் செலவு செய்யணும் அத பேக் பண்றதுக்கு அது பிரிச்சு எடுத்துட்டு போறதுக்கு லோடு பண்றதுக்கு அன்லோடு பண்றதுக்கு கிட்டத்தட்ட ஒரு மனுஷன் இன்னொரு மனுஷன் கூடு விட்டு கூடு பாய்ந்து வாழ்ற வாழ்க்கையை விட கடினம்.
இந்த புது பொருளை வாங்கிட்டு பழைய பொருளை அடுத்தவங்களுக்கு விக்கிற கஷ்டம் இருக்கு அப்பப்பப்பா முடியல எத்தனையோ பேரு இந்த மாதிரி தினம் தினம் கஷ்டப்பட்டு தான் இருக்காங்க.
ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு வேலைக்கு போறவங்க ட்ரான்ஸ்ஃபர் ஆகி போறவங்க அந்த மாதிரி அவங்க லட்ச லட்சமா செலவு பண்ணி வாங்கி போட்ட பொருள் எல்லாமே துச்சமா நினைச்சு கம்மியான விலைக்கு கொடுக்கிற நிலைமை இருக்குது.
இதுக்கெல்லாம் ஒரு தீர்வு இருக்கான்னு கேட்டீங்கன்னா இல்ல நம்முடைய தேவை அத்தியாவசியமான பொருளை மட்டும் வாங்கி வச்சிக்கிட்டு நம்ம திறமையா இருக்கிறது நமக்கு நல்லது நம்ம சொந்த வீடு இருக்குதா உங்களுக்கு என்ன வேண்டுமோ வாங்கி போடுங்க ஏன்னா இது நம்ம வீடு அது உபயோகப்படாது அப்படி என்ற வரைக்கும் அது நம்ம வீட்டுல தான் இருக்கும்.
ஆனால் வாடகை வீட்டில இரு க்கும்போது தேவையில்லாத பொருளை வாங்குவது நாம அவாய்ட் பண்ணனும் இதுதான் நமக்கு நல்லது இல்லனாக்கா பின்னாடி நீங்க கஷ்டப்பட நேரிடும்...
நன்றி!! வணக்கம்....
Comments